காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி நீர் திறப்பதை உறுதி செய்வது, ஒன்றிய அரசின் கடமை: வைகோ அறிக்கை

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, நவ. 5- மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,

காவிரி மேலாண்மை ஆணை யக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில் லியில் 3.11.2023 அன்று நடைபெற் றது.

அதில் த‌மிழ்நாடு அரசின் நீர் வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழ்நாட் டுக்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரை கருநாடகா திறந்து விட வேண்டும். ஆனால் நிகழாண் டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலு வையில் உள்ளது.

மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. த‌மிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர் நாடகாவுக்கு உத்தரவிட வேண் டும்” என வலியுறுத்தினார்.

அதற்கு கருநாடக அரசின் தரப் பில், ‘‘கருநாடகாவில் கடும்வறட்சி நிலவுகிற‌து. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதிஆகிய அணைகளில் குறைந்த அளவில் தான் நீர் இருப்பு உள்ளது.கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. 

எனவே தமிழ்நாட்டின் கோரிக் கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது.

தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

மேகேதாட்டுவில் புதிதாக‌ அணை கட்டினால் மழைக்காலங் களில் அதிகளவில் நீரை தேக்க முடியும். வீணாக கடலில் காவிரி நீர் கலப்பதை தடுக்க முடியும். 

எனவே மேகேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதிக்க வேண் டும்” என வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கரு நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் “காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவ ரிப்போம்,”  என்று கூறி இருந்தார்.

இதே கருத்தை மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத் தில் கருநாடகம் முன் வைத்து இருக்கிறது.

மேகேதாட்டு அணை கட்டுவதி லேயே கருநாடக அரசு முனைப்பு காட்டி வருவது கண்டனத்திற்குரி யது.

மேகேதாட்டு அணை கட்டப் பட்டால் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து முற்றாக  பாதிக்கப்படும்.

வறட்சிக்  காலங்களில் நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் தெளிவான உத்தரவை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை ஆணையம், ‘‘தமிழ்நாட்டின் விவசாய தேவைக் காக கருநாடக அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவம்பர் 23ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதா வது பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவின்படி,கருநாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும்.

– இவ்வாறு வைகோ குறிப்பிட்டு உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *