ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வருகை

Viduthalai
1 Min Read

 ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வந்தார் 

அரசியல்

சென்னை, ஏப். 13- ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டு கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னை திரும்பினார். அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், இருமல் ஏற்பட் டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சை களை அளித்தனர். இதற்கிடையில், கடந்த மாதம் 20ஆம் தேதி அவருக்கு கரோனாதொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் குணமடைந்த அவர் கடந்த 15ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று (12.4.2023) சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த ஈவிகேஎஸ், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *