தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி! மீண்டும் வர வேண்டும் தி.மு.க. ஆட்சி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

*தந்தை பெரியார்

 

எனக்கு வயது 91.

ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது.

17-9-1970ஆவது நாள் முதல் 92ஆவது ஆண்டு துவங்குகிறது.

91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம்போல் எனக்குத் தோன்றுகிறது.

மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள் போல் மக்களைக் காண்கிறேன்.

மேலும் மாறுதலடையுங்கள்

அதாவது,

கடவுள், மதம், ஜாதி முதலிய விசயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடைய பக்குவ மாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவுக்கும் காரணமாகும்.

இந்த நிலையில் நான் எனது 92ஆவது பிறந்த நாள் சார்பாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்வதெல்லாம் மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும்.

நான் இந்த நிலை அடைந்ததற்கும், மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காரணம் இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து வந்த ஆட்சியேயாகும்.

பார்ப்பனர் சூழ்ச்சிகள் தவிடுபொடி ஆயின

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு, எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்பவாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத்தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இவற்றை ஏன் பெருமையாக குறிப்பிடுகிறேனென்றால் பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள், எதிர்க் கட்சிகள் “தங்கள் சமுதாயத் திற்கு ஆபத்து வந்து விட்டது” என்று கருதி பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த, செய்து வருகிற இமாலயப் பிரயத்தனங்கள் தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதுதான்.

பத்தாண்டுகளுக்கு இதே ஆட்சி

இந்த நிலையில் நான் எனது 92ஆவது ஆண்டு செய்தி யாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்கு பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப்பிராயத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோ ரிடம் காணமுடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்துவருகிறது.

இதற்கு காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும்?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆட் சிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான் அதாவது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி; உறுதியேயாகும்.

(‘விடுதலை மலர்’ – 17.9.1970)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *