தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்

1 Min Read

சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப் பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறையின் 2023-2024ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த என்சிசி மாண வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளில் (காவலர், காவல் உதவி ஆய்வாளர், சிறைத்துறை, தீயணைப்புத் துறை பணியாளர் தேர்வுகள்) என்சிசி ‘ஏ’ சான்றிதழ் வைத்தி ருப்போருக்கு அரை மதிப்பெண்ணும், ‘பி’ சான்றிதழ் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் ‘சி ’சான்றிதழ் இருப்பின் 2 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு வாய்மொழித் தேர்வில் வழங்கப்படும் 12 மதிப்பெண் களில் என்சிசி செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்கு அரை மதிப்பெண் வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் என்சிசி படை பயிற்சிக்கு (பரேடு) ஒரு மாணவருக்கு ஒரு மணி நேர அணிவகுப்புக்கு வழங்கப்படும் உணவுத்தொகை ரூ.10-லிருந்து ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *