கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு நேற்று (25.2.2026) செங்கொடியைப் போர்த்தி, மலர்மாலை வைத்து மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,
‘‘வீர வணக்கம், வீர வணக்கம்!
என்றும் வாழுகிறார்,
என்றும் வாழுகிறார், மறையவில்லை!
எங்கள் ரத்தத்தில் உறைந்தார்;
உள்ளத்தில் நிறைந்தார்!
வாழுகிறார், வரலாறானார்! வரலாறானார்!
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!!
கொள்கைப் பணி முடிப்போம்!
அவரது லட்சியத்தின் கொள்கைப் பயணம் தொடரட்டும்!
தொடரட்டும், தொடரட்டும்!’’
என முழக்கமிட்டார்!
அதனைக் கேட்டு, உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘ஜனசக்தி’ ஆசிரியர் திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட திரண்டிருந்த தோழர்கள் அனைவரும் மீண்டும் முழங்கினர்.
