பணிந்தது ஒன்றிய அரசு! தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்

1 Min Read

                                                                                                      ஒன்றியஅரசின்சீருடைப்பணியாளர் தேர்வில் மாநில மொழிகள் புறக் கணிப்பைக் கண்டித்து தமிழ் நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. சிஆர்பிஎப் கணினித் தேர்வை தமிழிலும் நடத்த அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில் இன்று (15.4.2023) ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப் படும் என அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஒன்றிய ஆயுத காவல் படை தேர்வை தமிழ் உள் ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்துவது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் 

அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *