உணவு விடுதியில் தண்ணீர் குடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது கொடூரத் தாக்குதல்

Viduthalai
1 Min Read

அரசியல்

ரொஹதக், ஏப் 15  அரியானா மாநில எல்லையில் உள்ள பில்வாரா என்ற ஊரில் உயர்ஜாதிக்காரர் ஒருவரின் தேனீர் கடையில் வெளியூரில் இருந்து வேலைபார்க்க வந்த இளைஞர் ஒருவர் தண்ணீரைக் குடித்துவிட்டார். உடனே அவரைப் பிடித்து நீ எந்த ஜாதி என்று கேட்டுள்ளார். 

அவரும் தன்னுடைய ஜாதியைக் கூறியுள்ளார். அவரது ஜாதி அரியானா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் தாழ்த்தப் பட்டவர் பிரிவில் வருமாம். இதனை அடுத்து உணவு விடுதி  ஊழியர்களோடு சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கி கொதிக்கும் தண்ணீரையும் அவர் மீது ஊற்றியுள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித் ததும் ஓட்டல் உரிமையாளர் தப்பிச் சென்றுவிட்டார்.  தாக்குதலுக்கு துணை போன ஊழியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய் துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *