கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்

Viduthalai
2 Min Read

சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

அரசியல்

சென்னை,ஏப்.15- கிளாம்பாக் கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதம் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ் நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக் கையின் போது (13.4.2023) அமைச்சர் பி.கே.சேகர்பாபு 49 முக்கிய அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

தற்போது கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் பன்னாட்டு தரத்திற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.

திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்க ளுக்குப் பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.

சாத்தாங்காடு இரும்பு மற்றும் எகு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடி மதிப் பீட்டில் நவீன மயமாக் கப்படும்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மாதவரம் சரக்குந்து முனை யத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட் சிக்கு வழங்கும்.

சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி, வரதராஜபு ரத்தில் ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்படும்.

கிழக்கு கடற்கரையில் நீலாங் கரை முதல் அக்கரை வரை முதற் கட்டமாக சுமார் 5 கி.மீ நீளத்திற்கு மிதி வண்டிப் பாதை மற்றும் நடை பாதை ரூ.20 கோடி மதப்பீட்டில் அமைக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை, ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப் படும்.

கோயம்பேடு மொத்த விற் பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மய்யத்துடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுள், 6 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக் கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலையினை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல்.

சென்னையில் நான்கு மேம்பா லங்களின் கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப் படும்.

சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வனம் ஏற்படுத்தப்படும்.

சென்னை வெளிவட்டச் சாலையில் 4 உடற்பயிற்சிப் பூங் காக்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்டு பராமரிக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன் பாட்டிற்காக தமிழ்நாடு முதல மைச்சரால் தொடங்கி வைக்கப் படும்.

சென்னை பெருநகரப் பகுதியில் மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனு மதி, இணைய வழியாக வழங் கப்படும்.

சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப் படும்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவைக் கூடத்தினை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள் ளப்படும்.

ராயபுரம் மூலக்கொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *