பாசிச பா.ஜ.க. அணியை எதிர்த்து மம்தா – உத்தவ்தாக்கரே உள்ளிட்டோரை நேரில் சந்திக்கிறார் ராகுல்காந்தி – சரியான திருப்பம்

2 Min Read

அரசியல், இந்தியா

கருநாடக மாநில சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி  தேர்தல் நடத்தப்பட்டு 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு நடைபெறும் தேர்தலையொட்டி கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (16.4.2023 பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கே.எச். முனியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுடில்லி ஏப்.17  மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி  மற்றும் அய்க்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதலமைச்சரரும் நிதிஷ்குமார், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நிதிஷ்குமார் இரு தினங்களுக்கு முன் டில்லி வந்திருந்தார். அவருடன், ராஷ் டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத்தும் உடன் இருந்தார். இருவரும் காங்கிரஸின் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் அடுத்தகட்டமாக, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, தேசியவாதக் காங்கிரஸின் தலைவர் சரத்பவார் சில ஆலோசனைகள் அளித்துள்ளார். இதன்படி, ராகுல் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச் சரான மம்தா, மகராட்டிராவின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 

இந்த சந்திப்பில் ராகுல், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் நேரடி யாக அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிவார் என எதிர் பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் அணியில் காங்கிரஸ் இணைவதை மேற்குவங்க முதலமைச்சரான மம்தா தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனால் அவர், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முயற்சிக்கும் மூன்றாவது அணியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார். இதில், உத்தரப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர்.இச்சூழலில், ராகுலின் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு பலனளிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் தம் மீதான ஒரு கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை அடைந்து தனது மக் களவை உறுப்பினர் பதவியை ராகுல் இழந்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான எதிர்கட் சிகள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தனர்.

இதுபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றி ணைய எதிர்கட்சிகள் அனைவரும் தயா ராகவே உள்ளனர். இந்த ஒற்றுமை கூட்டணியாகி தேர்தலில் போட்டியிடுமா என்பதுதான் எதிர்கட்சிகள் இடையிலான முக்கிய கேள்வியாக நிற்பதாகக் கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *