நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் (10.2.2026) மகிழ்வாக ரூ.2000 நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!

– – – – –

பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி மற்றும் அவரது சகோதரர் க.சாமிநாதன் ஆகியோரது பிள்ளைகள் அ.இளவழகன் – பானுமதி, அ.கலாவதி – இராமநாதன், சா.செல்லையன் – வசந்தா,  சா.சொக்கலிங்கம் – சந்திரா ஆகியோருக்கு  அன்னை மணியம்மையார் தலைமையில் ஒரே மேடையில், ஒரே நாளில்  (10.02.1976 – செவ்வாய்கிழமை)  நடைபெற்ற நான்கு சுயமரியாதைத் திருமணங்களின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி  மகிழும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவர்களது சார்பில் ரூ 2000  நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

– – – – –

மா. புகழினி 10 ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு இயக்க நிதியாக ரூ.1000த்தை கழகப் பொது செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் (8.2.2026, ஒக்கநாடு மேலையூர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *