சென்னை,ஏப்.17- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை அறிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரா புரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த குடு (எ) முகமது ரபிக், (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி யுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு எனது ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தர விட்டுள்ளேன்.
-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.