ராணுவ வீரர்களுக்கு விமானம் தர மறுத்தது ஏன்? ஆளுநரை அமைதி காக்கும்படி பிரதமர் கூறியது ஏன்?

2 Min Read

மேனாள் ராணுவத்தளபதி கேள்வி

அரசியல்

புதுடில்லி, ஏப்.18  புல்வாமா தாக் குதல் குறித்து மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் 18 ஆவது ராணுவத் தளபதியான ஜெனரல் ஷங்கர் ராய்சவுத்ரி கூறும் போது, ராணுவ வீரர்களுக்கு விமானம் தர மறுத்து பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்

இந்தியாவின் 18ஆவது ராணுவத் தளபதியாகப் பணியாற்றியவரான ஜெனரல் ஷங்கர் ராய்சவுத்ரி கூறி யது, இவர் புல்வாமாவில் படு கொலையுண்ட சிஆர்பிஎப் வீரர்கள் விமானம் மூலம் சிறீநகருக்குப் பயணித்திருந்தால் இந்த கொடூர நிகழ்வை தவிர்த்திருக்கலாம், அங்கு ஒரு வெடிகுண்டு நிகழ்வு நடத் தப்படலாம் என உளவுத்துறை அறிக்கை வந்திருந்தது, அதனை  ஏற்று பயண திட்டத்தை மாற்றி  இருந்தால் புல்வாமா வெடிகுண்டு நிகழ்வை தடுத்திருக்கலாம், 2800 ராணுவ வீரர்களை ஏற்றிகொண்டு 78 ராணுவ வாகனங்கள் பாகிஸ் தான் எல்லைக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றிருக்கக் கூடாது என்று மேனாள் ராணுவத் தளபதி ஷங்கர் ராய்சவுத்ரி கூறினார்.

“புல்வாமாவில் உயிர் இழப்பு களுக்கு பொறுப்பேற்கவேண்டியது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்ற பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது உள்ளது. இது அந்த அரசுக்கு மிகவும் மோசமான பின்னடைவு”  என்றும் மேனாள் ராணுவப்படை தளபதி ஷங்கர் ராய்சவுத்ரி கூறினார்

2019 புல்வாமா தாக்குதல்  ஜம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் சிறீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய கான்வாய் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. இந்த கொடூர நிகழ்வு நடந்துக்கொண்டு இருக்கும் போது பிரதமர் மோடி பந்திப்பூர் பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் தன்னை முன்னிலைபப்டுத்தி ஆவணப்படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *