மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் பிப்.21: தஞ்சை மாநாட்டில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மயிலாடுதுறை, ஜன.5 மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலத்தில் நேற்று (4.2.2026)  காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில்  நடைபெற்றது. கழகக் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர் கு. இளமாறன் அனைவரையும் வர வேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

21.2.2026 சனிக்கிழமையன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு மாவட்ட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டு விளம்பரங்கள்!

மேற்படி மாநாட்டு செலவிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நிதியினை விரைவில் வசூல் செய்து கொடுப்பது என்றும் மாநாட்டுக்கான விரிவான விளம்பரங்களை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டக் கழகத் துணைத்தலைவர் ஞான.வள்ளுவன், மயிலாடுதுறை நகர கழகத் தலைவர் சீனி. முத்து, நகர கழகச் செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் அ.சாமிதுரை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரெ.செல்லதுரை குத்தாலம் ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் கு.இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்ட கழகத்  துணைச் செயலாளர் க.அருள்தாஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *