ஜெயங்கொண்டம், பிப்.3–- என்சிசி, ஏஎன்ஓ விற்கான பதவி உயர்வுகள் ராணுவ விதிகளின்படி குறிப்பிட்ட கால சேவை மற்றும் அடிப் படை பயிற்சியை முடித்த பிறகு ஏஎன்ஓ-களின் பதவி உயர்வு தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல்களை அந்தந்த என்சிசி மாநில இயக்குநரகம் அல்லது பட்டாலியன் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியை சேர்ந்த என்சிசி ஏஎன்ஓ ராஜேஷ் இரண்டு ஆண்டுகள் CTO-ஆகவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்று மூன்றாம் நிலை அதிகாரி (THIRD OFFICER)- ஆகவும் பணிபுரிந்த நிலையில் கும்பகோணம் தமிழ்நாடு 8 பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் எண் கர்னல் சேது மாதவன் தலைமையில் என்சிசி 2 நட்சத்திர தகுதி கொண்ட அதிகாரியாக சிறப்பு செய்யப்பட்டது. ராஜேஷ் அவரை பள்ளி தாளாளர் முதல்வர் கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் பலர் பாராட்டினர்.
