ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவை யில் அரசினர் தனி தீர் மானத்தை முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் முன்மொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மதம் மாறி னாலும் ஜாதி மாறுவது இல்லை. ஜாதிய இழிவுகள் ஒழிவது இல்லை. அரசமைப்பு திருத்தம் வேண்டி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஜாதியின் பெயரால் மறுக் கப்பட்ட உரிமைகளை, ஜாதியின் பெயரால் கொடுப்பதே சரி’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *