6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு காந்தியாரின் பெயரை சூட்ட கருநாடக அரசு முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, ஜன.31 கருநாடகாவில் மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும்  காந்தியாரின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டதில் (MGNREGA) காந்தியாரின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங் களுக்கும்  காந்தியாரின் பெயரைச் சூடும் அரசின் முடிவை பேரணி யின்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவித்தனர். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு 90% நிதி வழங்கிய நிலையில், தற்போது புதிய முறையின்படி மாநிலங்கள் 40% நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட் டுள்ளதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி காந்தியாரின் பாரம்பரியத்தை அழிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விவாதத்திற்காகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *