‘புதுமைப் பெண்’ திட்டத்தின் சாதனை: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 விழுக்காடு அதிகரிப்பு : உயர் கல்வித் துறை தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.21  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக, உயர்கல்வியை தொட ராமல் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசுப் புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, இளங்கலை மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பக் கலை மற்றும் அறிவியல் உள் பட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர் களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2022_20-23ஆ-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவ னங்களில் மாணவி களின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.  

அதன்படி, மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-_2022-_ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவி களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்த நிலையில், 2022_20-23-ஆம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து இருப்பதாக உயர்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 29 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 

இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், பொறியியல் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்ப வர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள் ளது. 

பள்ளி அளவில் இந்த திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வறு மையின் காரணமாக பள்ளிக்கு பிறகு, உயர்கல்விக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்படும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதத்தை இந்தத் திட்டம் குறைக்க உதவுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *