அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விதிகளை கடைப்பிடிக்காமல் 515 பள்ளிகள் தரம் உயர்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

சென்னை,ஏப்.22- பள்ளிகள் குறித்த இந்தியத் தணிக்கைத்துறைத் தலை வரின் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2016_20-17 முதல் 2020-_2021 வரையிலான காலத்தில் 515 பள்ளிகளில் தரம் மேம்படுத்துவதற்கான விதி முறைகளை கடைப்பிடிக்காமலேயே தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.  2021 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த இந் திய தணிக்கைத் துறைத் தணிக்கை தலைவரின் அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (21.4.2023) வைக்கப்பட்டது. இது குறித்து, மாநில முதன்மை கணக்காயர் (தணிக்கை-1) நெடுஞ்செழியன், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கான கணக் காயர் (தணிக்கை – 2) ஆனந்த் ஆகி யோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் அளித்த தணிக்கை அறிக்கை விவரங்கள் வருமாறு:- தணிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட 108 அரசு பள் ளிகளில் 48இ-ல் வகுப்பறை பற்றாக்குறை இருந்தது. இத னால், திறந்தவெளியில், மரங்களின் நிழலில், ஆய்வக கட்ட டங்களில், தற்காலிக வகுப்பறைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

கழிப்பறைகள், விளையாட்டு மைதானங் கள், ஆய்வகங்கள், சுற்றுச் சுவர் போன்ற வசதிகளும் அரசுப் பள்ளி களில் போது மானதாக இல்லை. அடிப்படைஉள்கட்ட மைப்புகளின் பராமரிப்பு தரமும் குறைவாகவே இருந்தது. விதி முறைகளை கடை பிடிக்கவில்லை 2016_20-17 முதல் 2020-_2021 வரையிலான காலத்தில், 528 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட் டது. இவற்றில் 515 பள்ளிகளில் தரம் மேம்படுத் துவதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்காமலேயே தரம் உயர்த் தப்பட்டன. இந்த பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதி களும், ஆசிரியர் மற்றும் பணியா ளர்களும் போதுமானதாக இல்லை. இலவச மடிக்கணினி, காலணிகள், பைகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பலன் கிடைக்கவில்லை.

-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *