ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உறுதி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஏப்.22- ஒடுக்கப்பட் டோருக்கும் சிறுபான்மை யின ருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் என முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான சென்னை, கொளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று (21.4.2023) வருகை தந்தார்.

அங்கு அவர், பள்ளி சீரமைப்புப் பணி, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, ஸ்மார்ட் வகுப்பறை அமைக் கும் பணி என மொத்தம் ரூ.6.91 கோடி மதிப் பிலான புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2,000 முஸ்லிம் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் முதல மைச் சர் வழங்கினார்.

நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

திமுகவுக்கும் முஸ்லிம் மக்களுக் கும் இடையே வரலாற்றுக்குரிய மகத்தான உறவு உள்ளது. நானும் உங்களில் ஒருவனாக இருந்து தொடர்ந்து பங்காற்றி வருகிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

தி.மு.க. ஒடுக்கப்பட்டோருக்கும் சிறுபான்மை யினருக்கும் என்றைக் கும் துணை நிற்கும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது முஸ்லிம் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைத் தொடர்ந்து நிறை வேற்றியுள்ளோம்.

எனது தலைமையிலான ஆட்சி யில் சிறுபான்மை நலன் காப்பதை முக்கிய அடையாளமாக உறுதி யேற்று செயல்படுத்தி வருகிறோம்.

நிதிநிலை கூட்டத் தொடரில் உலமாக்களுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

சிறுபான்மை மக்களின் அர ணாக திகழும் தி.மு.க. அரசு என் றென்றும் முஸ்லிம் மக்களை தாயன்போடு பரிந்து காக்கும். அனைவரது வாழ்வில், இன்பமும், வளமும் பொங்கிச் செழிக்கட்டும் என்று கூறி ரம்ஜான் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதலமைச்சர் பேசி னார்.

 நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *