பார்ப்பன சமூகத்தை அவமதித்துவிட்டாரா மத்தியப் பிரதேச பி.ஜே.பி. தலைவர்? பொங்குகிறது பார்ப்பன கும்பல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

போபால், ஜன.21 மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். சிந்த்வாரா மாவட்டத்தின் ‘பால்’ எனும் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் சேஷ்ராவ் யாதவ் கலந்து கொண்டு பேசுகையில்,

‘‘பார்ப்பனர்கள் அரசு அதிகாரத்தையும் தங்களுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். அரசு நிர்வாகப் பணிக்கு பிற சமூகத்தினர் உள்ளனர். பார்ப்பனர்கள் வழிபாட்டிற்கான பூஜை, சடங்குகள் செய்வது மற்றும் அறி வைப் போதிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி செய்யும் உரிமை மற்றவர்களுக்கே சொந்தமானது’’  என்று  பேசினார். அப்போது மேடையில் சிந்த்வாரா தொகுதி நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினர்  விவேக் சாஹு  இருந்தார்.

பார்ப்பனரான விவேக் சாஹு முன்னி லையில் அவர் இவ்வாறு பேசியது விவகாரத்தை மேலும் உணர்வுப்பூர்வ மாக்கியது

நிகழ்ச்சிக்குப் பிறகு, அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இதைக் கேட்டு பார்ப்பன சமூகத்தினரும் அவர்களது சங்கத்தினரும் கடும் கோபம் அடைந்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பார்ப்பன சமூக நிர்வாகிகள் கூட்டாக நடத்திய போராட்டத்தில் ‘‘சேஷ்ராவின் கருத்து சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவித்து, சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் செயல் இது. இதற்காக, சேஷ்ராவ் யாதவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜ.க. தலைமை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *