மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில்: இஸ்ரோ அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஏப்.23  மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத் தில் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித் துள்ளது.

ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

விண்வெளி துறையில் தனியாரை ஊக் குவிப்பது, தொழில் முனைவோரை ஊக் குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடு வதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ராக்கெட் 12-14 கி.மீ. வரை சென்று அதன் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்.தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்த சோதனை ஓட்டம் நடத்தப்படும். 

மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணி!

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ராக்கெட் சில நாள்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பி வரும். இஸ்ரோவின் வரவிருக்கும் விண் வெளி பயணங்களில், விண்வெளி நிறுவனம் ‘ஆதித்யா எல்-1′, வழிகாட்டும் செயற்கை கோள்கள், அதிக எடை கொண்ட ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.யுடன் வணிக ரீதியான ஏவுதல் மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவுகணை வாகனத்துடன் (எஸ்.எஸ்.எல்.வி.) ஒரு பணியை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.சிறிய செயற்கைகோள்களை விண் ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதேபோல், ’72 ஒன் வெப்’ செயற் கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு – ரூ.1,000 கோடிக்கு மேல் எல்.வி.எம் 3 ராக்கெட்டுடன் நல்ல வணிக வாய்ப்பு உள்ளது.

விண்வெளி நிறுவனம் அதன் செயல் திறனில்  சமரசம் செய்யாமல் செலவை குறைக்க சில மறுசீரமைப்புகளை செய்து வருகிறது.குறிப்பாக ராக்கெட்டின் மேல் பகுதி நீண்ட காலம் இருக்கும் என்பதால் அதனை சுற்றுப்பாதை தளமாக பயன்படுத்துவது குறித்த எண்ணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அதன்படி தற்போது அனுப் பப்பட்ட பி.எஸ்.எல்.வி.55 ராக்கெட்டின் மேல் தளத்தில் அறிவியல் சோதனைகள் நடத்துவதற்கான 7 கருவிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *