மே 2இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

1 Min Read

சென்னை,ஏப்.23-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 2ஆம் தேதி தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் வெளிநாடு செல்வது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 ஆகிய நாள்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, உலக முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *