சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சென்னை மாநிலக் கல்லூரியில் மேனாள் மாணவர் சங்கம் சார்பில் இன்று (24.4.2023) நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் வி.ஜி. சந்தோஷ,ம், சாரதா நம்பி ஆரூரான், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அவ்வை அருள், சென்னை மாநில கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ. இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.