மதவெறிக்கு அளவே இல்லையா? மாட்டிறைச்சி வைத்திருந்ததாக மனநலம் பாதித்தவர் மீது ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெய்ப்பூர், ஜன. 10 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலா வார் மாவட்டம் அக் லேரா அருகே பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பஜ்ரங் தளம்  மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஹிந்துத்துவா கும்பல் ஒன்று, மாட்டி றைச்சி வைத்திருந்ததாகக் கூறி மன நலம் பாதித்த முதியவர் ஒருவர் மீது  தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட முதி யவர் வலியால் அலறிய போது, ஹிந்துத்துவா  குண்டர்களில் ஒருவர், ‘‘இவன் எப்படி இருந்தாலும் ஒரு முஸ்லிம் தான்” என்று வன்மத்துடன் வெறுப் புப் பேச்சைக் கக்கினர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து  “ஆல்ட் நியூஸ் (Alt News)” ஊடகம்  ஜாலாவார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அமித் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த காட்சிப் பதிவு ஆதாரத்தின் அடிப்படையில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக மூன்று பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காட்சிப் பதிவை ஆதாரமாகக் கொண்டு, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராகேஷ் ராவ், அஜய் பரேதா மற்றும் ரோகன் சென் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களைக் காவல்துறையினர் கைது செய்து  நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள்ளேயே குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *