மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து உரை

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது; குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது!
பழைய சோறு, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான பலன்கள் குறித்த கருத்தரங்கம்

சென்னை, ஜன.6  பழைய சோறு  – புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது; குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது என்று பழைய சோறு, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான பலன்கள் குறித்த கருத்தரங்கத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று (5.1.2026) சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, விழா பேருரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:-

“பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்’’

2009 ஆம் ஆண்டு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சராக இருந்தபோது, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், ஸ்டெம்செல் ஆராய்ச்சி மய்யத்தினை இந்திய மருத்துவ வரலாற்று கவுன்சில் (ICMR) இணைந்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும்  இம்மய்யம் 2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையாக மேம்படுத்தப்பட்டது. இந்த மய்யத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மரு.ஜெஷ்வந்த் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட காரணமாக உலகிற்கு பல்வேறு தகவல்கள் இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு

2,000 மேற்பட்ட உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது

பழைய சோறு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே தொன்று தொட்டு வரு கின்ற ஓர் உணவாகும். சமைத்த உணவு நொதிக்கப்பட்டு இருந்த உணவுதான் பழைய சோறு. இந்தியாவில் இரவு ஊற வைத்த உணவு காலையில் உட்கொள்வது தான் பழைய சோறு. இந்த சோறு மூலம் பல்வேறு சத்துக்கள் நமது உடலில் செல்கின்றது. பழைய சோறு மூலம் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்சத்துக்கள் இருப்பதை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் ஆராய்ச்சி மய்யத்தில் கண்டு பிடிக்கப்பட்டு தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக நார்ச்சத்துக்கள் 631% அதிகமாகவும், எதிர்ப்பு மாவு சத்து 270% அதிகமாகவும், புரதச்சத்து 24% அதிகமாகவும் நுண் சத்துக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், வைட்டமின் – பி சத்துக்கள் இருக்கிறது. மேலும், இரும்பு சத்துக்களை 12 மடங்கு அதிகமாக உடலில் எடுத்துக் கொள்ள செய்கிறது. பழைய சோற்றில் இருக்கும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் குடலில் சேர்ந்து 2,000–த்திற்கும் மேற்பட்ட உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.

பழைய சோறு தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

புற்றுநோய் வராமல் தடுப்பது, நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வதால் குழந்தை நன்றாக வளர்கிறது. குறை பிரசவம் வெகுவாக குறை கிறது, கர்ப்பகால நீரிழிவு நோய் வருவது குறைகிறது, கர்ப்பகால அதிக உயர் இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது, இரத்தக் கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. கல்லீர லில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது.

பழைய சோறு சாப்பிடுவதால் சரியாகக் கூடிய பல்வேறு நோய்கள்

பல்வேறு வகையான வயிற்றுப்போக்கு நோய்கள், கிருமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட நோய்க்குறி, வயிறு வீக்கம் மற்றும் வாயு பிடிப்பு போன்ற நோய்களிலிருந்து குணமாவதற்கு உதவுகிறது.  இப்படியாக உடல் நலத்திற்கு பாதுகாப்பான மிகச் சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி ரூ.2.44 கோடி செலவில் 11.03.2022 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை” தொடங்கப்பட்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பழைய சோறு சிகிச்சை மூலம் இரைப்பை சிகிச்சை மேற்கொண்டவர்களிடமும் உரை யாடல் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.2.44 கோடி செலவில்
ஸ்டெம் செல் ஆராய்ச்சி மய்யம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ரூ.2.44 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மய்யம் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை’’ உருவாக்கப்பட்டது. மேலும் பழைய சோறு குறித்து உங்களுக்கு எடுத்துரைக்கத் தகுதி படைத்தவராக இருப்பதை நான் அறிகிறேன். நான் சிறுவயதில் இருந்தே வாரத்திற்கு 2 முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறேன். இப்போது இந்த கருத்தரங்கத்தின் மூலம் பழைய சோறு மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் அறிந்தபிறகு வாரத்தின் 7 நாட்களும் பழைய சோறு சாப்பி டுவது என்று முடிவு செய்திருக்கிறேன். ஏதாவது ஒரு உணவு இரவு 11 மணிக்கு காரமாக சாப்பிட்டு, காலை 4 மணிக்கு எழுந்தவுடன் உடற்பயிற்சி செல்லும்போது குடல் எரிச்சல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவே பழைய சோறு சாப்பிட்ட அன்று காலையில் இந்த குடல் எரிச்சல் என்பது இல்லை. எனவே, இது அறிவியல் பூர்வமாகவே நல்ல பலனைத் தருகிறது என உணர்ந்தவன் நான். குடலில் ஏற்படுகிற புண் நீண்ட நாட்களுக்கு பிறகு புற்று நோய் என்ற புது வடிவத்தோடு ஒரு பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே, அந்தப் புண்ணை சரி செய்வதற்கு பழைய சோறு காரணமாக இருப்பதால் எல்லோருமே இதனை உட்கொள்வது நல்லது. இதனால் பல நன்மைகள் உள்ளது. நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதையும் தாண்டி காலையில் இதனை எடுத்துக்கொள்ளும்போது தாய்மார்களுக்குச் சமைக்கிற பணி என்பது 100 சதவீதம் குறைகிறது. இதனால் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது, மேலும் பொருளாதாரமும் மிச்சப்படுகிறது.

பழைய சோறு என்றால் ‘ஏழையின் அடை யாளம்’ என்கிற வகையில் ஒரு கேள்வியும் எழக்கூடும். ஆனால் நிச்சயம் ஒரு மருத்துவர் 5 ஆண்டு காலம் உழைத்து பல்வேறு வகையில் இந்தப் பழைய சோற்றினை சாப்பிட்டவர்களுடன் உரையாடி, அவர்கள் பெற்ற பலனை எல்லாம் அனுபவ ரீதியிலாகவே உணர்ந்த காரணத்தினால் தான் இதை செய்து காட்டியுள்ளார்கள். எனவே, இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கடமை. இதனால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும், எதிர்வினையும் ஏற்பட்டுவிடாது. எனவே, நாம் ஒவ்வொருவரும் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தத் துறையின் சார்பில் நம்முடைய பெருமதிப்பிற்குரிய மரு.ஜெஸ்வந்த் அவர்களுக்கு  இக்கல்லூரியின் முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து கொண்டு வருகிறார். இந்த துறை யின் சார்பில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தச் செய்தியை பொது மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் இது சம்பந்தமான குறிப்புகளையும், கோப்புகளையும், இத்துறையின் ஆராய்ச்சிகளையும் ஆவ ணங்களையும் வைத்து முதலமைச்சர் அவர்கள் மற்றும் நமது துறையின் அலுவலர்கள் அனைவருடனும் பழைய சோறு தினம் குறித்து கலந்து பேசி துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் விழா பேருரையாற்றினார்.

இந்நிகழ்வில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் பல் மருத்துவ பிரிவில், புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பி னர்அய்ட்ரீம் இரா.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ்,  மருத்து வக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அரவிந்த், மருத்துவமனை கண்கா ணிப்பாளர் மரு.ஜோதிகுமார், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் மரு.ஜெஸ்வந்த், பேராசிரியர் மரு.ஆனந்த் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *