ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 26.4.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அரசுப் பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர் மற்றும் பராமரிப்பு நியமனங்களில் தமிழ் மொழி பேசத் தெரிந்த வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 11 மற்றும் 12ஆம்  வகுப்புகளில் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கிய பகுதிகளை கேரளாவில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆபத்தான மனிதர்களால் நடத்தப்படும் நாடாக இந்தியா உள்ளது. பாஜகவில் இருந்து விடுபட 2024 கடைசி வாய்ப்பு. விவசாயிகள் ஒற்றுமையாக நின்று தங்கள் உரிமை களுக்காக போராட வேண்டும் என்று  மேனாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கருத்து.

* முஸ்லிம் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் கருநாடக அரசின் முடிவை மே 9 வரை அமல்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தி ஹிந்து:

* கருநாடகாவில் ‘40% கமிஷன் அரசு’ என்ற குற்றச் சாட்டுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *