புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விபரீதம்! கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழப்பு பட்டாசு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெனிவா, ஜன. 02- சுவிட் சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக் கான காரணம் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.

சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற கேளிக்கை விடுதி நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத் தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தனர்.

பட்டாசு வெடி சத்தத்துக்கு மத்தியில் கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்த சிறிய இடத்தில் ஏராளமானோர் குவிந்திருந்த தால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்தவுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்களும் ஹெலிகாப் டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்கள் காரணமாக மருத் துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நோயாளிகளின் எண் ணிக்கை திடீரென அதிகரித்ததால் நிலைமையை சமாளிக்க மருத்துவப் பணியாளர்கள் போராடியதாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து செய்தியாளர் களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேட்டன் லதியான், ‘‘லி கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டடத்துக்குள் 100க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். பலர் காயமடைந்திருப்பதையும் பலர் உயிரிழந்திருப்பதையும் நாங்கள் பார்த்தோம். விசார ணையை தற்போதுதான் தொடங்கி உள்ளோம். இது, பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற பனிச்சறுக்கு சுற்றுலாத்தலம்’’ என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *