கேந்திரிய வித்யாலயா பள்ளி பணி நியமனத்தில் தமிழருக்கு அநீதி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஏப்.27- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதா னுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்த கடிதத்தில்; கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய் யப்பட்ட முறையே 784 மற்றும் 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி, அதிர்ச்சி தருவது, நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது. தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை மெரிட் எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட வர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. என்ற விவரங்கள் இல்லை. மெரிட்டில் வரக்கூடிய இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமூகத்தில் உள்ளது.  ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 மீனாக்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் தேர்வர்களில் ஒரு மீனா கூட இல்லை. இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப் படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்சிஎஸ்டி தேர்வர்கள் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள் ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதான் தெரிவிக்க வேண்டும். ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங் களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவின ருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *