பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த பத்து பேர் உயிரிழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தூர், ஜன.1  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதால், கழிவு நீர் குடிநீருடன் கலந்துள்ளது. இந்தத் தண்ணீரைக் குடித்த பலருக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்த உள்ளார். உயிரிழந்தவர்களில் 6 மாதக் குழந்தையும், 6 பெண்களும் அடங்குவர்.

தற்போது அந்தப் பகுதியில் சுமார் 2,700 வீடுகளில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பணியில் அலட்சியமாக இருந்த ஒரு துணைப் பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.2 லட்சதம் நிவாரணம்

மத்தியப் பிரதேச முதலமைச்சர்ர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தியாவின் தூய்மை யான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில், இத்தகைய சுகாதாரச் சீர்கேடு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை அந்தப் பகுதிக்குத் தூய்மையான குடிநீர் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *