எந்தெந்த படிப்பு – என்னென்ன படிப்புகளுக்கு இணையானவை அல்ல: உயர் கல்வித்துறை அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப். 27- வேலைவாய்ப்பு நோக்கத்தின் அடிப்படையில், எந் தெந்த படிப்புகள், என்னென்ன படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்பது தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை விளக் கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை முதன் மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 

வேலைவாய்ப்பு நோக்கத்தின் அடிப்படையில், திருப்பதி சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழ கத்தால் வழங்கப்படும் பி.காம் கணினி பயன்பாடு படிப்பு, பி.காம் படிப்புக்கு இணையானது அல்ல. 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் வழங்கும் எம்.ஏ. கூட்டுறவு படிப்பு, எம்.காம். படிப்புக்கு சம மானது அல்ல. அய்தராபாத் பல் கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்பாடு கணிதம் படிப்பு, எம்.எஸ்சி. கணிதம் படிப் புக்கு இணையானது அல்ல. 

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் வழங்கும் எம்.எஸ்சி. சுற்றுச் சூழலியல் படிப்பு, எம்.எஸ்சி. நுண் ணுயிரியல் படிப்புக்கு சமமானது கிடையாது. அண்ணாமலை பல் கலைக் கழகத்தால் வழங்கப் படும் பி.லிட். படிப்பு, பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது அல்ல. சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப் படும் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப் பும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி. உயிரி -தொழில் நுட்பம் படிப்பும், பி.எஸ்சி. விலங் கியல் படிப்புக்கு இணையானது அல்ல. அதேபோல, சென்னை மாநிலக் கல்லூரியில் (தன்னாட்சி அந் தஸ்து) வழங்கப்படும் எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பு, கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக் கழ கத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. மரைன் பயாலஜி படிப்பு, திருநெல் வேலி மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தால் வழங் கப்படும் எம்.எஸ்சி. பயோ-மெடிக் கல் சயின்ஸ் படிப்பு ஆகியவை எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு இணையானது கிடையாது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *