உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பெரும் மோசடி ஆட்சியர்களிடம் விவசாயிகள் புகார் மனு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.28 நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்துக்கான பிரிமியம் தொகையில் ஒன்றிய அரசு 40%, மாநில அரசு 50% விவசாயி 10% செலுத்துகின்றனர். வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணத்தால் விளைச்சல் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை டிசம்பரில் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள் ளனர்.

மஹோபா மாவட்டம் சந்தோஷ்புரா கிராமத்தில், 113 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டது. ஆனால், விசாரணை தொடங்கிய பிறகு, டிசம்பர் 10 அன்று, அதே எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு ரூ.9 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாக இணையதளத்தில் காட்டப்பட்டது. இதேபோல், லுஹாரி கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் ரூ.1.47 கோடி வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டது, அது டிசம்பரில் ரூ.39 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குல்பஹார் தாலுகாவில் உள்ள இந்தோரா கிராமத்தில், ரூ.1.1 கோடி காப்பீட்டுத் தொகை விநியோகிக்கப் பட்டது. இந்தக் கிராமத்தில் 33 பேர் ரூ.83.49 லட்சம் பெற்றுள்ளனர். இந்த 33 பேரில் ஒருவர் கூட இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இதுகுறித்து மஹோபாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத் தலைவர் குலாப் சிங் கூறுகையில், ‘‘விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் காப்பீடு செய்யப்பட்ட நிலப்பரப்பு ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேசிய அளவில் பல ஊழல் நடைபெறுவதாக சந்தேகம் உள்ளது. இதன் மீது ஒன்றிய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

வாகன காப்பீடு திட்டத்தில் தனி நபர் பயனடைய முடியும். ஆனால், பயிர் காப்பீடு திட்டத்தில் தனிநபரின் பயிர் பாதிக்கப்பட்டால் காப்பீடு கிடைப்பதில்லை. ஒரு கிராமமே பாதிக்கப் பட்டால்தான் பலன் கிடைக்கிறது. மேலும் அனைவருக்கும் ஒரே தொகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *