பக்தி என்பது இதுதானா? பிள்ளையார்பட்டி கோவில் பண முறைகேடு விவகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச.27 சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந் தமான ரூ.1.76 கோடி, 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.

இதில் தண்ணீர்மலை, முத்துராமன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.சிறீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் நவநீதராஜா, சுஜித் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக் காளர் ராஜராஜேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறங்காவலர்களுக்கு நிலம் அல்லது சொத்துக்களை கையாளும் அதிகாரம் உள்ளதா, அறங்காவலர்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள் ளார்களா என சரிபார்க்க வேண்டும். தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பிற பொருட்கள், வங்கி கணக்குகளில் வரவு செய்யப்பட்டுள்ள தொகையை சரிபார்க்க வேண்டும். யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், அவர்கள் இவ்வாணையரிடம் தெரிவிக்கலாம். கமிஷன் ஜன.,30ல் இந்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக் கால உத்தரவு ஜன.,30 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *