ஆதார் – பான் இணைப்பு: டிசம்பர் 31 கடைசி நாள்! தவறினால் நேரும் விளைவுகள் என்ன

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, டிச. 27- ஒன்றிய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசமே இறுதியானது என்று கூறப்படுகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

அபராத விவரம்

பழைய கார்டுதாரர்கள்: இது வரை ஆதார் – பான் எண்ணை இணைக்காதவர்கள், தற்போது இணைப்பதற்கு ரூ. 1,000 அபராதமாக செலுத்த வேண்டும்.  புதிய கார்டுதாரர்கள்: 2024 அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை பெற்றவர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இலவ சமாக தங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இணைக்காவிட்டால்
ஏற்படும் பாதிப்புகள்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப் படாத பான் எண்கள் செல்லாததாக (Inoperative) அறிவிக்கப்படும். இதனால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படும்:  வரி ரீஃபண்ட் கிடைக் காது: ஒருவர் செலுத்திய கூடுதல் வரி அல்லது வரி பிடித்தங்களை (TDS/TCS), வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து மீண்டும் பெற முடியாது.

வழக்கமாகப் பிடிக்கப்படும் வரியை விட, பான் எண் செல்லாத நிலையில் பிரிவு 206AA மற்றும் 206CCஇன் கீழ் மிக அதிகப்படியான வரி பிடித்தம் செய்யப்படும். நிதி பரிவர்த்தனைகள் பாதிப்பு: வங்கி கணக்கு தொடங்குதல், முதலீடுகள் செய்தல் போன்ற முக்கிய நிதிச் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *