‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ம.சுப்பராயன், தலைவர், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்

1 Min Read

அரசியல்

கருப்புச்சட்டை என்ன சாதித் தது என்று கேட்கும் தினமலர் அந்துமணியே சொல்கிறேன் கேள்!

உங்கள் வீட்டுப் பெண்கள், முன்பெல்லாம் கணவனை இழந்த பின் முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தார் களே! அந்த நிலை இப்போது உண்டா? அவர்களெல்லாம் மறு மணம் செய்துகொண்டு சுயமரியா தையுடன் இன்று வாழ்வதற்கு பெரியாரின் கருப்புச்சட்டைதானே காரணம்? 

இதற்கெல்லாம் தொடர்ந்து ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண் டிருக்கும் எங்கள் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தானே காரணம்? உங்களால் இதனை மறுக்க முடியுமா?

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களின் நீதிபதிகளைப் பார்த்து “மை லார்ட்” என்று உங் களின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் இறைஞ்சுகிறார்களே. இதற்கெல் லாம் யார் காரணம்? உலகத் தலை வர் பெரியாரின் கருப்புச்சட்டையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் கருப்புச்சட்டையும் தானே காரணம்?.

கருப்புச்சட்டை என்ன சாதித் தது? என்று கேட்கும் தினமலரின் அந்துமணியே வாலைச் சுருட்டிக் கொள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *