உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மே 3இல் தேர்வு

1 Min Read

அரசியல்

நெல்லை, ஏப்.28 தமிழ்நாடு அரசுப் பணியில் உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான தேர்வு முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றில் 200 வினாக்களுக்கு நடத்தப்படும். இதற்கான கணினி வழித் தேர்வு மே 3ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, விழுப்புரம் உட்பட 22 முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

தேர்வு அறையினுள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதர நபர்கள் தேர்வு மய்யத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நடக்கும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பிரதான தேர்வில் பொது அறிவுத் தாள், பொது ஆங்கிலம், விருப்ப பாடம் 1, 2 என நான்கு தாள்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *