கோவையில் கழகக் குடும்ப விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

கோவை, ஏப். 28- பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு.இராமச் சந்திரன் அவர்களின் 98ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட காப்பாளர் ம.சந்திர சேகர், மாவட்ட செயலாளர் க.வீரமணி உள்ளிட்ட கழகத் தோழர் கள் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வசந்தம் கு.இராமச்சந்திரன் அவர்கள் தமது 98ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000 மகிழ்ச்சி யுடன் வழங்கினார்.

நிகழ்வில் மாநகர தலைவர் வே. தமிழ்முரசு, மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் வெங்கடா சலம், விடுதலை வாசகர் வட்டம் கு.வெ.கி.செந்தில், மற்றும் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்ப கம் – பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்  நிகழ்வில் வசந்தம் கு.இராமச்சந்திரன்அவர்களின் துணைவியார் ஆர்.ரங்கநாயகி அம்மாள், ஆர்.தாமோதரன், டி. தனலட்சுமி, வசந்த் டி ராமச்சந் திரன், வி.சிறீம்மா, வி.ரித்விக் மற் றும் ஜே.இந்தராணி, கே.ஜெக தேஷ், உள்ளிட்ட உறவினர்களும் பங்கேற்றனர்.

கல்வி உதவித்தொகை

பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர் கள் தமது 98ஆம் ஆண்டு பிறந்த நாள் ஏப் 26,  மகிழ்வாக சுந்தராபுரம் கழகத் தோழர் ஜெயக்குமார் உமாதேவி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களின் இரண்டா மாண்டு கல்லூரி கட்டணத்திற்கு கல்வி உதவித் தொகை ரூ.18,000 வழங்கி பெண் கல்வியையும்  ஊக் கப்படுத்தினார். 

அந்த மாணவியின் குடும்பத் தினரை சந்தித்து மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர், மாநகர செயலாளர் வே.தமிழ்முரசு ஆகி யோர் அந்த தொகையை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *