இதுதான் ஒடிசா பா.ஜ.க. ஆட்சியின் அவலம்! கடுங்குளிரில் விமான ஓடுபாதையில் தேர்வு எழுதிய கொடுமை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கட்டாக், டிச. 21– ஒடிசா மாநிலத்தில் 187 ஊர்க்காவல் பணியிடத்திற்கு நடந்த தேர்வில் கலந்துகொள்ள 8000 முதுநிலைப் பட்ட தாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அவர்களை ஜமாலியாப்பூர் விமான ஓடுபாதையிலேயே அமர வைத்து தேர்வெழுத வைத்தது ஒடிசா அரசு நிர்வாகம்.

வேலையின்மை கொடுமையை மற்றும் இளைஞர்களைக் கடுங் குளிரில் வெட்டவெளியில் அமர வைத்து தேர்வெழுதக் கூறியதன் மூலம் அம்மாநில பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

ஒடிசா மாநிலம் உருவான பிறகு முதல் முதலாக 2024ஆம் ஆண்டு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது. அன்றுமுதலே நிர்வாகம் முடங்கிவிட்டதாக மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறி வந்தார்.

இந்த நிலையில் எழுதப் படிக்கத் தேவையான எழுத்தறிவு 5ஆம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஊர்க்காவல் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது சம்பல்பூர் மாவட்டத்தில் வெறும் 187 ஊர்க்காவல் படை வீரர்களுக்கான அறிவிப்பு வெளியாகி டிச. 19ஆம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியானது.

தேர்தல் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்வெழுத ஆயிரக் கணக்கான  மாணவர்கள் சேர்ந்துகொண்டே இருந்தனர்

இவ்வளவு பேருக்கு தேர்வெழுத இட வசதி இல்லாத காரணத்தால் அருகில் உள்ள கை விடப்பட்ட விமான நிலைய ஓடுபாதையில் தேர்வெழுத ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து விமான நிலைய ஓடுபாதையில் அத்தனை பேரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

இப்போது வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்தக்குளிரில் வெட்டவெளியில் அமரவைத்து தேர்வெழுத உத்தரவிட்ட ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் மற்றும் நவீன் பட் நாயக்கின் கட்சியான பிஜு ஜனதாதளம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *