உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவித்த ஆறு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 20– இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் அண்மையில் கூடி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இதன்படி, 5 நீதிபதிகளைத் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்யவும், ஒரு தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யவும் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை வழங் கப்பட்டுள்ளது. கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, பின்வரும் நீதிபதிகள் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்

நீதிபதி மனோஜ் குமார் குப்தா அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி ரேவதி பி மோஹிதே டேரே மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி எம்.எஸ். சோனக் மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி ஏ. முஹம்மது முஸ்தாக் கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி சங்கம்குமார் சாஹூ ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளனர் நீதிபதி சவுமென் சென் மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் இவர், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.

இந்த பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன், குடிய ரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்னா தலைமை நீதிபதியாக பதவி ஏற்க வுள்ள சங்கம்குமார் சாஹூ மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *