நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!

1 Min Read

 தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!

அரசியல்

நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.

நாளை (மே முதல் நாள்) – மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம் குதூகலமாய்க் கொண்டாடப்படும் நாளில், அதனை இங்கு பற்ற இருந்த ‘கிரகணம்’ – தொழிலாளர்கள், முற்போக்காளர்களின் கட்டுப்பாடான எழுச்சியாலும், மக்களின் குரலுக்கு செவி சாய்த்து செயல்படும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரிய சாதுரியத்தாலும் மே நாள் கொண்டாட்டமாக ஆகி உள்ளது இவ்வாண்டு!

வாழ்த்தி மகிழ்கிறோம்!

‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; 

அவன் காணத் தகுந்தது வறுமையாம் – அவன்

பூணத் தகுந்ததும் பொறுமையாம்”

என்ற நிலை மாறிட, நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!

அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

30.4.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *