கருநாடகா தேர்தல் பிஜேபி அமைச்சர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு

2 Min Read

புதுடில்லி, மே 2- கருநாடகாவில் மஜத வேட்பாளரிடம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

கருநாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறு கிறது. இதில் அமைச்சர் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதில், சாம்ராஜ்நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) சார்பில் மல்லிகார்ஜுன சாமி (எ) ஆலூர் மல்லு போட்டியிடுகிறார். 

இந்நிலையில், சோமண்ணா மஜத வேட்பாளர் மல்லிகார்ஜூனசாமியுடன் செல்போனில் பேசுவது போன்ற ஒலிப்பதிவு ஒன்று வெளியானது. அதில், வேட்பு மனுவை திரும்ப பெறுமாறு மல்லிகார்ஜுன சாமியிடம் சோமண்ணா கூறுகிறார். அவ்வாறு செய்தால் பணம் தருவதாகவும் அரசு வாகனம் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த ஆணையம், சோமண்ணா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக வேட்பாளர் சோமண்ணா மஜத வேட்பாளருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக புகார் வந்துள்ளது. இதை மிகவும் தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். இதுகுறித்து இந்திய தண்டனை சட்டத்தின் 171இ (லஞ்சம்), 171எப் ஆகிய பிரிவுகளின் கீழ் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களை மிரட்டுவது அல்லது அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற் சிப்பதை தேர்தல் ஆணையம் பொறுத் துக் கொள்ளாது. மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 171இ மற்றும் 171எப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படி குறிப்பிட்ட தொகு தியின் தேர்தலை நிறுத்தி வைக்க முடி யும். 

இதுபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(1)-வது பிரிவின் கீழ் சம் பந்தப்பட்ட வேட்பாளர் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *