சென்னை, டிச.16- அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 31.01.2026 அன்று அன்று நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி களில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள்-500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர் களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000) என வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்திலுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும்.
முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும். மாணவர்கள் www.dgeingov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 18.12.2025 முதல் 26.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் அய்ம்பது மட்டும்) சேர்த்து 26.12.2025க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
