ராஜஸ்தான் பிஜேபி அரசின் இலட்சணம்! தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற முயன்ற 3 எம்.எல்.ஏ.க்கள் சிக்கினர் பதவி பறிக்கப்படும் நிலை!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெய்ப்பூர், டிச.16  ராஜஸ்தானில் தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் வாங்க முயன்று சிக்கிய 3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

லஞ்சம்

இந்த மூவரிடமும் ராஜஸ் தானின் ‘தெய்னிக் பாஸ்கர்’ நாளேடு தனித்தனியாக ‘ஸ்ட்ரிங் ஆப்ரேஷன்’ நடத்தியது. இதற்காக, பெயரளவில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இருந்தது. இந்த மூவரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி பணிகளுக்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த டிசம்பர் 14-இல் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நடவடிக்கையில், ஆளும் பாஜகவின் ரேவந்த ராம் டங்கா, எதிர்க்கட்சியான காங்கிரஸின் அனிதா ஜாதவ், சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினரான ரிது பனாவத் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

பாஜகவின் டங்கா ரூ.50 லட்சம் பணிக்கு 40 சதவீதம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். காங்கிரஸின் அனிதா ஜாதவ் ரூ.50,000 பெற்றுக்கொண்டு ரூ.80 லட்சம் மதிப்பிலான பணி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சிபாரிசு கடிதம் அளித்துள்ளார். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ரிது, லஞ்சத் தொகையாக ரூ.40 லட்சம் நிர்ணயித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அப்பணி தொடர்பான அதிகாரிகளும் தனியாக அந்த நிறுவனத்திடம் லஞ்சத் தொகைக்கு பேரம் பேசியுள்ளனர். இந்த வகையில் லஞ்சத்தொகை சுமார் 70 சதவீதம் போக மக்களுக்கான பணிக்கு 30 சதவீதமே மிஞ்சும் நிலை ஏற்பட்டது. இவர்கள் லஞ்சம் கேட்கும் காட்சிப் பதிவுகள் ஊடகத்தில் மிகத் தெளிவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பதவிக்கு சிக்கல்

இதையடுத்து, ராஜஸ்தானின் முதலமைச்சர் பஜன் லால் சர்மா லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை அவைத்தலைவர் வாசுதேவ் தேவ்னானி, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்கள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தாக்கீது அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளன.

அவைத் தலைவர் உத்தரவின் பேரில் ராஜஸ்தான் சட்டப் பேரவையின் நெறிமுறைகள் குழு விசாரணை செய்ய உள்ளது. பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் சந்த வர்மா தலைமை யிலான இக்குழுவால், 3 சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றவாளிகள் என முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் சட்டப் பேரவைத் தலைவரால் இந்த மூவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியி லிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *