பெரியார் சிலையை மூடுவதா?

1 Min Read

 நான் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையையும், பாளையில் உள்ள தந்தை பெரியார் சிலையையும்  வண்ணம் தீட்டி பராமரித்து வருகிறேன் என்பதை தங்கள் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்த விளிம்பு நிலை மக்களை மானமும், அறிவும் பெற செய்திட்ட தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கடந்த அடிமை அதிமுக ஆட்சியில்  தமிழ்நாடெங்கும் கூண்டு அமைத்தது தாங்கள் அறிந்ததே – இது என் போன்ற எண்ணில் அடங்கா பகுத்தறிவுவாதிகளுக்கும் பெரியார் பற்றாளர்களுக்கும் நெஞ்சில் பாய்ந்த வேலாக வேதனையைத் தந்தது. 

இந்த நிலையில் கடந்த மே மாதம் 2021இல் தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு மாண்புமிகு தளபதியார் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு அமைக்கப்பட்ட கூண்டுகள் அகற்றப்பட்டு விட்டன. எனவே, அதே வழிமுறையைப் பின்பற்றி பாளை பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றி உள்ள கூண்டை அகற்றிட உத்தரவிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் பகுத்தறிவு பணியில்

ஆ.சஞ்சய்குமார், திருநெல்வேலி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *