மனிதச்சமூகம் தோன்றியது முதல் பல இடங்களில் குடியேறிக் கொண்டே இருக்கிறது, அப்படி குடியேறும் போது ஏற்படும் சிக்கல்கள், வலிமையுடையவர் கள் எளியவர்களை அடக்குவது, அன்பால் பழகும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆள்வது போன்றவை தொன்று தொட்டு தொடர்கிறது.
மத்திய புல்வெளி(இன்றைய ஈரா னுக்கு மேற்கே)களில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் சிறு பகுதி கைபர் போலன் கனவாயைக் கடந்து இந்திய தீபகற்பத்திற் குள் வந்து இங்குள்ளவர்களை அடக்கி ஆள முயன்றது. அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்கிறது,
இதே போல் தான் அமெரிக்காவிலும் 1500 களின் இறுதியில் அய்ரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்து அங்கு குடியேறத் துவங்கினர். அங்கு ஏற்கெனவே இருந்த பழங்குடியினத் திற்கும் புதிதாக குடியேறியவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கை அமைதி யான முறையில் தீர்த்துவைத்த சிறுமி போகாஹொன்டாஸ் செயல் வியப்புக் குரியது.
போகாஹொண்டாஸ் பூர்வீக அமெரிக்கப் பெண் ஆவார். இவர் பொவ்ஹாட்டன் பழங்குடி மக்களினத் தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் வர்ஜீ னியாவின் டைட்வாட்டர் பகுதியைச் சூழ்ந்திருக்ககும் செனகோம்மாகாவில் இருந்த பழங்குடியினரின் முதன்மையான தலைவரான போஹாடனின் மகளாவார்.
1607ஆம் ஆண்டு போகா ஹொண்டாசின் சிற்றூருக்கு ஆங்கிலே யர்களின் மூன்று கப்பல்கள் வந்தன. பழங்குடியின மக்கள் ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சினர். ஆனால் 12 வயது போகாஹொண்டாஸ் ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஆர் வத்துடன் கவனித்தார். ஆங்கிலேயர்கள் பழங்குடியினருடன் வணிகம் செய்யத் தொடங்கினர். அப்பகுதியில் ஜேம்ஸ் டவுன் என்ற நகரை உருவாக்கி அங்கு கோட்டை கட்டிக் கொண்டனர்.
கோட்டையில் இருந்த கேப்டன் ஜான் ஸ்மித் சிறுமியான போகாஹொண் டாஸ் பழக்கவழக்கம்-நட்பு பாராட்டுதல் அனைத்தும் பிடித்துப் போனது. ஒரு முறை கேப்டர் ஜான் ஸ்மித்தை தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு கூறி னாள்.
அப்போது அங்கு வந்த கேப்டன் ஜான் ஸ்மித்தை பழங்குடியினர் சிறை பிடித்தனர். ஸ்மித்துக்கு பழங்குடியினத் தலைவர் பாவ்ஹாடன் தண்டனையை அறிவித்தார். ஆனால் போகாஹொண் டாசின் கோரிக்கையின் பேரில் சிறுமியின் தந்தை அவரை விடுவித்தார். இதனை பழிதீர்க்கும் விதமாக போகாஹொண் டாஸ் 1613 ஆம் ஆண்டு ஆங்கிலேய குடியேற்றவாசிகளால் சிறைபிடிக்கப் பட்டார். இவளைப் பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு பாவ்ஹாடனிடம் தங் களுக்கு தேவையான உணவு, ஆயுதங் கள் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் பெற்றுக் கொண்டனர். சிறுமியை சொந்த கிராமத்துக்கு அனுப்பவில்லை.
அவள் ஆங்கிலேயர்களின் குடியி ருப்பில் வாழ்ந்துகொண்டே ஆங்கிலே யர்களும் பழங்குடியின மக்களும் சுமூ கமான உறவைப்பேண வழிவகை செய் தார். இதைபோக்காஹான்டசின் அமைதி என்று குறிப்பிடுகின்றனர்.1616 ஆம் ஆண்டில், குடியேற்றவாசிகள் இவரை லண்டனுக்கு அழைத்ததுச் சென்றனர். அமைதியின் தூதராக இங்கிலாந்து மக்களால் சிறுமி போகாஹோண்டாஸ் போற்றப்பட்டார்
இவர் அங்கு பிரபலமானவராக, போற்றப்பட்டார். மேலும் வைட்ஹால் அரண்மனையில் மாஸ்க்கி எனப்படும் இசைநாடகக் கூத்து நாடகத்தில் கலந்து கொண்டார். லண்டனின் சூழல் போகா ஹொண்டாசுக்கு ஒத்துக் கொள்ள வில்லை. நோயால் தாக்கப்பட்டு இங்கிலாந்தின் கிரேவ்சென்டில் 20 வயதில் இறந்தார். அவர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், கிரேவ்சென்டில் அடக்கம் செய் யப்பட்டார்; இவரது கல்லறையின் சரியான இடம் தெரியவில்லை, ஏனெ னில் தேவாலயம் தீயினால் அழிந்து அதன் பின்னர் மீண்டும் கட்டப்பட்டது.
இவர் உயிரிழந்த செய்தி அறிந்து பாவ்ஹட்டன் கிராமம் வேதனையுற்றது. சில ஆண்டுகளாக இருந்துவந்த அமைதி உடன்படிக்கை முறித்துக் கொள்ளபட்டது. பழங்குடிகளுக்கும், குடியேறிகளுக்கும் நீண்டகாலம் சண் டைகள் நடந்தன. இறுதியில் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டனர்.
பிற்காலத்தில் அவர் அய்ரோப்பியர் களிடையே அமைதிக்கான இளவரசி யாக போகாஹான்டஸ் சித்தரிக்கப்பட்டார். இவ்வாறு அமெரிக்காவில் உள்ள பல இடங்கள், அடையாளங்கள், தயாரிப்பு களுக்கு போகாஹொண்டாஸ் பெயரிடப் பட்டது. இன்றும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய சிறுவர் இலக்கியத்தில் இவர் பற்றிய கதைகள் ஏராளம் உண்டு. நவீன திரைஉலகில் அனிமேசன் மூலம் மீண்டும் போகாஹொண்டாஸை உரு வாக்கி குழந்தைகளிடையே அமைதிக் காக அவர் ஆற்றிய பணிகளை எளிமை யான கதைகளாக, திரைப்படங்களாக எடுத்து வருகின்றனர்.