மே 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 3- தென்கிழக்கு வங்கக்கடலில் மே 8ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று (2.5.2023) கூறியதாவது:

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந் திக்கும் பகுதி நிலவுகிறது. இது தவிர, காற்றின் ஈரப்பத அளவு கூடியிருப்பதால், நிலப்பகுதியில் ஈரப்பத குவியல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும்,13 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி முதல் தேனி வரையிலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக் காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் மே 6ஆம் தேதி வளிமண்டல மேல டுக்கு சுழற்சி உருவாக உள்ளது. தொடர்ந்து, 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவா கக்கூடும். இது வலுவடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *