பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  பிறந்த நாள்  விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.  பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு  தலைமைதாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், முன்னிலை வகித்தார். பெரியார்  இலக்கிய அணி செயலாளராக செயலாளர் பா. பொன்னுராசன், பா.முத்து வைரவன் , ச.ச.மணிமேகலை ஆகியோர் கருத்துரையாற்றினர்  மாநகர துணைத்தலைவர் கவிஞர் எச்.  செய்க்முகமது  கடவுள் மறுப்புக் கூறினார். மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் மு.இராச சேகர், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர் இரா.லிங்கேசன் வரவேற்று பேசினார். செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *