குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு தலைமைதாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், முன்னிலை வகித்தார். பெரியார் இலக்கிய அணி செயலாளராக செயலாளர் பா. பொன்னுராசன், பா.முத்து வைரவன் , ச.ச.மணிமேகலை ஆகியோர் கருத்துரையாற்றினர் மாநகர துணைத்தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது கடவுள் மறுப்புக் கூறினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.இராச சேகர், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர் இரா.லிங்கேசன் வரவேற்று பேசினார். செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books