பழனி கழக மாவட்டம் சார்பில் மே-1 உழைப்பாளர் நாள் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பழனி கழக மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்றார், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ச.திராவிடச்செல்வன் (ப.க மாவட்டத் தலைவர்), சி.இராதாகிருட்டிணன் (நகரச்செயலாளர்) க.மதனபூபதி (ஒன்றியத் தலைவர்), வழக்குரைஞர் ஆனந்தன் (நகரத் தலைவர் ஒட்டன்சத்திரம்), மு.ரகுமான், குண.அறிவழகன், ச.பாலசுப்பிரமணியன், ப.பாலன், சி.கருப்புச்சாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ம.தி.மு.க, தமிழ்புலிகள், ஆதித்தமிழர் கட்சி, வி.சி.க. மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.