அய்.அய்.டி. மாணவர்களுக்கு 30 உளவியல் ஆலோசகர் நியமனம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 5- அய்அய்டி மாணவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கிய நிலை குறித்த சுகாதார கணக் கெடுப்பு தொடங்கியது. இதற்காக 30 உளவியல் ஆலோசகர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அய்அய்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அய்அய்டியில் பணியாற்றும் பேராசியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் ஆரோக் கிய நிலை குறித்து கணக் கெடுக்க முடிவு செய்யப் பட்டது. 

அதன்படி, தமிழ் நாடு அரசின் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் இக் கணக்கெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப் பட்டுள்ள 30-க்கும் மேற் பட்ட பிரத்யேக உளவி யல் ஆலோசகர்கள், அய்அய்டி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நேரடி யாக  சந்தித்து அவர்களின் ஆரோக்கிய நிலை குறித்த விவரங்களை சேகரிப்பர்.

‘குஷால் திட்டம்’ தொடக்கம்

இந்த கணக்கெடுப்பை அய்அய்டி இயக்குநர் வீ.காமகோடி நேற்று (4.8.2023) தொடங்கி வைத்தார். மேலும், அய் அய்டி பேராசிரியர்கள் – மாணவர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வகை செய்யும் ‘குஷால் திட்டம்’ என்ற புதிய திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *