மல்லையா, நீரவ் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் ரூ.26,645 கோடி இழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.3 விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பெரும் தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் முராரிலால் மீனா, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது;

தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். தப்பியோடி பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018இன் கீழ் அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

15 பேரில் 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டனர். இந்த பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் பெயர்கள் அடங்கும்.அவர்களால் 2025 அக்டோபர் 31 வரை வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு வட்டி உள்பட ரூ.31,437 கோடியாகும். அசல் தொகை இழப்பு ரூ.26,645 கோடி. இந்த 15 பொருளாதார குற்றவாளிகளால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ.57,082 கோடி ஆகும். இந்த குற்றவாளிகளிடம் இருந்து ரூ.19,817 கோடி மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்து இருந்தார்.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள தப்பி யோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியல்:  விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெ. சந்தேசரா, சேத்தன் ஜெ. சந்தேசரா, தீப்தி சி. சந்தேசரா, சுதர்ஷன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம், புஷ்பேஷ் குமார் பெய்ட், ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *