கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரையின் 93ஆம் பிறந்த நாள் விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கல்லக்குறிச்சி, டிச.3– திராவிடர்கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 93ஆவது பிறந்த நாளையும் 12ஆம் ஆண்டு நினைவு நாளையும்  முன்னிட்டு இந்த ஆண்டும் வழக்கம் போல்  மாவட்ட கழகத்தில் 2 நபர்களுக்கு விருதும், ரூபாய் தலா அய்ந்து ஆயிரமும் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

30.11.25 காலை 11மணிக்கு கல்லக்குறிச்சி சேலம் பிரதான சாலையில் உள்ள எஸ்.எம் டவர் சொற்பொழிவு அரங்கில் மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமையில், மாவட்ட கழக தலைவர் வழக்கு ரைஞர் கோ.சா.பாஸ்கர் அனைவரையும்  வரவேற் புரையாற்றியும்  மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய  கழக  தலைவர் செல்வ சக்திவேல், மாவட்ட கழக துணைச் செயலாளர் பா.முத்து, உலகியநல்லூர் கழக தலைவர் ராஜேந்திரன், மணலூர்பேட்டை சக்தி,ஏ.கலைஞன், மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட கழக  இணைத் தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை உரையாற்றியும் பெரியார் வீரமணி சமூக நீதி விருது மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் திருக்கோயிலூர் அய்யா பாலன் அவர்களுக்கும், பெரியார் சாமிதுரை சமூக நீதி விருது மாவட்ட கழக மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தனுக்கும், ஆத்தூர் மாவட்ட கழக காப்பாளர் த.வானவில் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்டம் முழுவ திலும் இருந்த ஏராளமான கழகத் தோழர்களும் பொது மக்களும் கலந்து கொள்ளும் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் பொருளாளர் குடும்பத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் அவர்களும், மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கி சிறப் பித்தார்கள். இந்நிகழ்வின் இறுதியில் பெரியார் உலகம் நிதியாக மாவட்ட மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தன் ரூபாய் பத்தாயிரம்,தி.க பொதுக்குழு உறுப்பினர் திருக்கோயிலூர் தி.க. பாலன் ரூபாய் ஆறு ஆயி ரமும் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கரிடம் வழங்கி மகிழ்ந்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *